எழுச்சிக்குயில் 22 & 23.09.2018; சனி & ஞாயிறு காலை 09:00 மணி Mehrzweckhalle, Sportplatzstrasse 17, 4553 Subingen SO ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க தங்களையே ஆகுதியாக்கி விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவுகள் சுமந்த எழுச்சிப் பாடற்போட்டி நிகழ்விற்கு கலைஞர்கள், தமிழ் உறவுகள் அனைவரையும் அழைக்கின்றது சுவிஸ் தமிழர் நினைவேந்தல் அகவம்.
இந்நிகழ்வில் வெற்றி பெறுபவருக்கு எழுச்சிக்குயில் 2018 விருதோடு தஞ்சையில் அமைந்திருக்கும் “முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்” தரிசிப்பதற்கான ஏற்பாடுகளுடன் விமானச்சீட்டும் வழங்கி மதிப்பளிக்கப்படும்.